அவரவர் கர்மாவை எவராலும் மாற்றி அமைக்க முடியாது! யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

மகாபாரதத்தில் சூதின் போது பாண்டவர்களுக்கு கண்ணன் உதவாதது ஏன்?

மகாபாரதத்தில் கண்ணன் தர்மம் நிலைக்க வேண்டும், அதர்மம் அழிய வேண்டும் என்று விரும்பினான். அதனால்தான் ஆரம்பம் முதலே பாண்டவர்களுக்கு துணையாக நின்றான் கண்ணன். கண்ணன் நினைத்திருந்தால் சூதை தடுத்து அல்லது சூதின் போது பாண்டவர்களுக்கு உதவி அவர்கள் சூதில் சகுனியின் சூழ்ச்சிக்கு முன் தோற்காமல் செய்திருக்க முடியும். ஆனால் ஏன் கண்ணன் அப்படி செய்யவில்லை? பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்! சூதின் போதே பாண்டவர்களுக்கு கண்ணன் உதவியிருந்தால் மகாபாரதத்தின் குருஷேத்திர போர் நடந்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது கர்ணனும் கூட உயிரோடு இருந்திருப்பான். ஏன் அனைவரும் கூட ஒருவேளை ஒன்று சேர்ந்திருக்கலாம் அல்லவா? ராமாயணம், மகாபாரதம் என இரண்டிலும் வந்த முக்கிய கதாப்பாத்திரங்கள்!!! நமது கர்மாவுக்கு ஏற்ப தான் நமது செயல்பாடுகளும், விளைவுகளும் இருக்கும் அதுதான் மகாபாரதத்திலும் நடந்தது. அந்த காரணத்தினால் தான் கண்ணன் பாண்டவர்களுக்கு சூதின் போது உதவவில்லை....

வனவாசத்தில் பாண்டவர்கள் பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சாலியுடன் வனவாசத்தில் வாழ்ந்து வந்தனர். ஓர் நாள் ஓய்வாக அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கண்ணனை பற்றிய பேச்சு எழுந்தது. கண்ணன் கருணைக் கடல், எளியவருக்கு உதவும் மனமுடையவன். தீமை எங்கு நடந்தாலும் அவன் பொறுத்திருக்க மாட்டான். என அனைவரும் மகிழ்ந்து பேசி வந்தனர். அப்போது தான் கண்ணனை பற்றி சில கேள்விகளை பீமன் எழுப்பினான். கண்ணன் கருணை கடல் தான், தீனரட்சகன் தான் ஏழ்மையில் அனைவருக்கும் உதபுவன். ஆனால் சிலருக்கு மட்டுமே உதவுகிறான் அது ஏன்? நமக்கு சூதில் உதவாத கண்ணன், பாஞ்சாலிக்கு மட்டும் உதவியது ஏன்? என்று தனது கேள்விகளை எழுப்பினான். பாண்டவர்களில் சகாதேவனே கண்ணனை முற்றிலும் அறிந்தவன் ஆவான். சகுனி சூதுக்கு அழைத்த போது நாம் கண்ணனின் உதவியை நாடவில்லை. அழைத்தால் நமக்கு இழுக்கு ஏற்படுமோ என்று அஞ்சினோம். போரில் வீரமுடைய நமக்கு சூதில் வீரம் இல்லையோ என்று உலகம் பழிக்கும் என்ற அச்சம் நம்முள் இருந்தது. வறட்டு கெளரவம் இன்றி கண்ணனின் உதவியை முதலே நாடியிருந்தால் நாம் சூதில் தோற்றிருக்க மாட்டோம். பாஞ்சாலிக்கு உதவி பாஞ்சாலி தனக்கு அநீதி இழைக்கப்பட்டுப் போதும், தனது மானம் பறிபோய் கொண்டிருந்த நிலையிலும் கூட கைகளை மேலே உயர்த்தி, கண்ணா, கண்ணா என்று வணங்கி அவன் மீது நம்பிக்கை கொண்டிருந்தால். அதன் பயனாகவே கண்ணன் பாஞ்சாலிக்கு உதவினான். கண்ணன் தன்னை நம்புவோரை எப்போதும் கைவிடுவதில்லை. நாம் மான உணர்வினால் செய்த தவறின் பயனாக தான் வனவாசம் வந்துள்ளோம். அவரவர் கர்மா என்பது எவராலும் மாற்றியமைக்க முடியாதது என்று சகாதேவன் கூறினான். அனைவரும் ஒருமனதாக அந்த கருத்தை வரவேற்றனர்.

அவரவர் கர்மாவை எவராலும் மாற்றி அமைக்க முடியாது! யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்! 

 குத்து விளக்கு ஏற்றுவது எப்படி? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்ன? எந்த திக்கு நோக்கி விளக்கின் திரி இருக்க வேண்டும்? 
கிழக்கு முக விளக்கு பலன் குத்து விளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும்.
 மேற்கு முக விளக்கு பலன் மேற்கு முகமாக தீபம் ஏற்றினால் கிரக தோஷம் பங்காளி பகை உண்டாகும். 
வடக்கு முக விளக்கு பலன் வடக்கு முகமாக தீபம் ஏற்றினால் கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும்; திரண்ட செல்வம் உண்டு.  
தெற்கு முக விளக்கு பலன் தெற்கு முகமாக விளக்கு ஏற்றினால் அப சகுனம்; பெரும் பாவம் உண்டாகும்.

 எத்தனை முகம் அல்லது திரி ஏற்ற வேண்டும்?
குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலன்.  
இரு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை.  
மும்முகம் ஏற்றினால் புத்திர சுகம், கல்வி கேள்விகளில் விருத்தி.  
நான்கு முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.  
எந்த திரியில் விளக்கு ஏற்றினால் என்ன பலன்? தாமரைத் தண்டு திரி பலன் தாமரைத் தண்டில் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும். வாழைத் தண்டு திரி பலன் வாழைத் தண்டு நூலில் திரி போட்டால் குல தெய்வ குற்றமும், சாபமும் போகும். புது மஞ்சள் சேலைத் துண்டு திரி புது மஞ்சள் சேலைத் துண்டில் திரி போட தாம்பத்ய தகராறு நீங்கும். புது வெள்ளை வஸ்திர திரி புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீரை விட்டு உலர விட்டு போட்டால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் வந்து மூதேவி அகன்று விடுவாள். எந்த எண்ணையை திரிக்கு விட்டால் என்ன பலன்?  நெய் விளக்கு ஏற்றினால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும் இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் பூஜிப்பவருக்கும், பூஜிக்கப்படும் இடத்திற்கும் விருத்தி.   விளக்கு எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பங்கள் விலகும்  நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் மிகுந்த பலன் இல்லை, மத்திம பலன் குறிப்பு: கடலை எண்ணையோ இதர தரம் குறைந்த சமையல் எண்ணைகளையோ விளக்கில் உபயோகிப்பது மூதேவி ஆராதனையாகக் கருதப்படுவதால், அவற்றை நீக்குவது நன்மை தரும். திருவிளக்கு பூஜையின் பலனும் சிறப்பும்! இந்து சமயத்தில் திருவிளக்கு வழிபாடு உன்னதமானதான இடத்தைப் பிடித்துள்ளது. எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் இல்லத்தில் எழுந்தருளச் செய்வதே விளக்கு வழிபாடாகும். ஆதியில் வேதரிஷிகள் ஹோமம் வளர்த்து இறைவனை வழிபட்டனர். இந்த முறையே தற்போது தீப வழிபாடாக மாறியிருக்கிறது. விளக்கு வழிபாடு சுற்றுப்புறத்தில் இருக்கும் இருளை அகற்றுவதோடு நம் மனதின் இருளையும் அகற்றுகிறது. வீட்டின் வாசலை மெழுகி மாக்கோலம் இட்டு அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்து, பின் அதனை வீட்டு பூஜையறையில் வைத்தால் அவ்விளக்குடன் மகாலட்சுமியும் நம் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம். தற்போது பெண்கள் குழுவாக சேர்ந்து கோயில்களில் விளக்கு வழிபாடு செய்வது பிரபலமடைந்து வருகிறது. இந்த விளக்கு வழிபாட்டால், பல ஹோமங்களை நடத்துவதால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. விளக்கை ஏற்றி வழிபடாதவர்கள் அவ்விளக்கு அணைந்து விடாமல் பாதுகாக்கவாவது செய்யலாம். விளக்குபூஜை எப்போது ? பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். மாதங்களுக்கேற்ப இப்பலன்கள் வேறுபடுகின்றன சித்திரை - தானிய வளம் உண்டாகும். வைகாசி - செல்வம் செழிக்கும். ஆனி - திருமணபாக்கியம் உண்டாகும். ஆடி - ஆயுள்பலம் கூடும். ஆவணி - புத்தித்தடை நீங்கும் புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும் ஐப்பசி - நோய்கள் உண்டாகும் கார்த்திகை - நற்பேறு கிட்டும் மார்கழி - ஆரோக்கியம் கூடும். தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும். மாசி - துன்பங்கள் நீங்கும். பங்குனி - தர்மசிந்தனை வளரும். விளக்கு பூஜையின்போது கவனிக்கவேண்டியவை * விளக்குகளை நன்றாக கழுவி அதனை சுத்தமான தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்கவேண்டும். பூஜைக்கு உடைந்த, கீறல் விழுந்த விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. திரி ஏற்றியபின்பு விளக்கு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். * விளக்கிற்கு பூமாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்டலாம். சுடரில் இருந்து பத்தி, சூடத்தை கண்டிப்பாக கொளுத்தக் கூடாது. * எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். * வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு பக்கம் பார்த்து வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும். * விளக்குகளை தீக்குச்சியால் நேராக பற்ற வைக்காமல் துணைவிளக்கின் உதவியோடு மட்டுமே ஏற்ற வேண்டும். * பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை எல்லோரும் சேர்ந்து ஒரே மாதிரியான குரலில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது. ராஜயோகம் தரும் வழிபாடு வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நீண்ட நேரமாக எரிந்ததால் அது அணையும் நிலையில் மிகக்குறைவான சுடருடன் எரிந்தது. அவ்விளக்கில் இருந்த நெய்யை உண்பதற்காக ஒரு எலி தீபத்தை நோக்கி தாவியது. அப்போது எலி தன்னை அறியாமலேயே திரியை தூண்டிவிட்டது. இந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தி மன்னனாக பிறந்தது. வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தால் மோட்சமும் அடைந்தது. தெரியாமல் திரியை தூண்டிவிட்டதற்கே ஒரு எலிக்கு ராஜயோகம் கிடைத்தது என்றால் நாம் இறைவனை எண்ணி ஏற்றும் விளக்கிற்கு என்ன பலன் கிடைக்கும். ஐந்து முக விளக்குகள் ஏன் ? நாம் வாழும் உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. நம் உடலும் ஐம்பொறிகளால்தான் இயங்குகிறது. பெண்கள் வைத்திருக்க வேண்டிய நற்குணங்களும் ஐந்து. இவ்வாறு, ஐந்து என்ற எண் நம் வாழ்க்கையில் பிரதானமாக இருக்கிறது. இதனை உணர்த்தும் விதமாகத்தான் குத்து விளக்கை ஐந்து திரியுடன் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டது. எதற்காக எட்டு? திருவிளக்கு பூஜைக்கு பயன்படும் குத்துவிளக்கின் மீது எட்டு இடங்களில் பொட்டு வைக்கவேண்டும் என்பது நியதி. இதற்கு காரணம் இருக்கிறது. உச்சியில் ஒன்று, அதற்கு கீழ் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரையும் குறிக்கும் பொருட்டு மூன்று பொட்டுகள், அதனையடுத்து கைகளாக கருதி இரண்டு மற்றும் திருவடியில் ஒன்று என பொட்டு வைக்க வேண்டும். இதனால் விளக்குபூஜை பரிபூரணமானதாய் இருக்கும் என்பதாக ஐதீகம். பூஜைக்கு தயாராவோம்! முதலில் பூஜை செய்யும் இடத்தை மெழுகியும், விளக்கை நன்கு துலக்கியும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பூஜை செய்வதற்கு முன்பு அவ்விடத்தில் தலைவாழை இலையை விரித்து, அதில் முனை முறியாத அரிசியை (அட்சதை) பரப்பி, அதன் மீது விளக்கை வைத்து சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து மலர்களாக அலங்கரிக்க வேண்டும். பின்பு துணை விளக்கினால் திரியை ஏற்ற வேண்டும். எச்செயலைச் செய்யும் முன்பும் விநாயகரை வழிபடவேண்டும் என்பதால் மஞ்சளில் சிறிய விநாயகரைப் பிடித்து ஒரு வெற்றிலையில் வைத்து அவரையும் அலங்கரிக்க வேண்டும். பின்பு பூஜைக்கு தேவையான பொருட்களை அருகில் வைத்துக் கொண்டு, விளக்கை வணங்கி விட்டு அமரவேண்டும். பின் ஓம் ஒளிர்வளர் விளக்கே போற்றி என்று சொல்லிக்கொண்டே திரியை ஏற்ற வேண்டும். பின் தொடர்ந்து அம்பாள் துதிப்பாடல்களை பாடியபடி பூஜையை துவங்கிவிடலாம். திரிகளும், பயன்களும் குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன. * பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும். * வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும். * தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும். * வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும். * புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும். * சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும். * வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது. விளக்கு பூஜைக்கான விதிகள் * திருவிளக்கு பூஜைக்கு எவர்சில்வர் விளக்குகள் உகந்தது அல்ல என்பதால் பித்தளை, வெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். * பூஜையின்போது, தலைவாழை இலை மீது குத்து விளக்கை வைக்க வேண்டும். இதனால் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும் என்பதாக ஐதீகம். * விளக்கின்மீது எட்டு இடங்களில் சந்தனம், குங்குமப்பொட்டு வைக்க வேண்டும். * ஒரு திரி கொளுத்துவதனால் கிழக்கு முகமாக மட்டுமே கொளுத்த வேண்டும். * கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் அணைக்கலாம். விளக்கு பூஜைக்கு தேவையான பொருட்கள் விளக்கு பூஜைக்கு தயாராகும் முன்பு கீழ்கண்ட பொருட்களை முன்னதாகவே தயாராக வைத்துக்கொள்ளுங்கள். திருவிளக்கு, தேவையான எண்ணெய், சாம்பிராணி, கற்பூரம், கோலமிடுவதற்கு பச்சரிசி மாவு, வாழை இலை, சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி, மாலை, அட்சதை அரிசி, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் கிழங்கு, நைவேத்திய பொருட்கள், துணை விளக்கு, தீர்த்த பாத்திரம், தாம்பாளம் மற்றும் அமர்ந்து கொள்வதற்கு சிறிய விரிப்பு. கணபதி பாடல் விளக்கு துதிப்பாடல் பாடுவதற்கு முன்பு மஞ்சளால் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையாரை கீழ்க்கண்ட பாடலைப்பாடி பூஜை செய்ய வேண்டும். ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்துப் போற்றுகின்றேனே. எண்ணெயும் பலன்களும் குத்துவிளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கேற்ப பலன்களும் மாறுபடுகிறது. சுடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது. பசுநெய் - சகல செல்வமும் பெருகும். நல்லெண்ணெய் - பீடை விலகும். ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.  

திருவிளக்கில் எத்தனை பொட்டு வைப்பது? வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன. விளக்கேற்றும் பலன்கள் ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும் இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும் மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும் நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும் ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்  
யாருக்கு என்ன எண்ணெய் கணபதி - தேங்காய் எண்ணெய் நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய் மகாலட்சுமி - பசுநெய் குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய் ருத்திரர் - இலுப்பெண்ணெய் பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய் விளக்கேற்றும் திசைகள் கிழக்கு - துன்பங்கள் நீங்கி குடும்பம் விருத்தி பெறும் மேற்கு - கடன், தோஷங்கள் நீங்கும் வடக்கு - திருமணத்தடை அகலும் தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது. நல்ல நாளில் விதிவிலக்கு விளக்கை செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் துலக்க கூடாது என்றாலும் விசேஷ நாட்களான பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை தீபம், குடும்பத்தில் நடத்தப்படும் சுபநிகழ்ச்சிகள் மற்றும் இதர விழாக்களின்போது, பரிசுத்தமான நீரால் விளக்கை துலக்கி, சுத்தமான புதிய துணியால் துடைத்து விபூதியால் விளக்கை தேய்க்க வேண்டும். விசேஷ நாட்களில் துலக்க விதிவிலக்கு உண்டு.

 விளக்கு துலக்கும் பலன்கள்
 ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கு துலக்கி தீபமேற்றினால் கண் தொடர்பான நோய்கள் குணமாகும், பார்வை பிரகாசமடையும்.
 திங்களன்று விளக்கு துலக்கினால் மனசஞ்சலங்கள், குழப்பங்கள் நீங்கி மனதில் அமைதி ஏற்படும். தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளரும்.
வியாழக்கிழமை துலக்கினால் குருபார்வை கிடைத்து கோடி நன்மைகள் உண்டாகும், கவலைகள் நீங்கி மனம் நிம்மதியடையும்.
 சனிக்கிழமையன்று விளக்கை கழுவினால் வாகனங்களில் பாதுகாப்பான பயணம் கிட்டும். விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது. திங்கள் வியாழக்கிழமைகளில் விளக்கேற்றி குளிர வைத்த பிறகு (சுமார் இரவு 9 - 9.30 மணிக்குள்) விளக்கை துலக்குவது நல்லது. வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநதியட்சணி குடியேறுகிறாள். எனவே விளக்குகளை திங்கள் மற்றும் வியாழன் முன்னிரவிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் துலக்குவதே நல்லது.  

திருவிளக்கு வழிபாடு

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே! ஜோதி மணிவிளக்கே! சீதேவி பொன்மணியே! அந்தி விளக்கே! அலங்கார நாயகியே! காந்தி விளக்கே! காமாட்சித் தாயாரே! பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரிபோட்டு குளம்போல எண்ணெய்விட்டு கோலமுடன் ஏற்றிவைத்தேன்; ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளங்க வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான்விளங்க மாளிகையில் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன்! யான் தரணியிலே ஜோதியுள்ள தாயாரைக் கண்டுவந்தேன்! மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா! சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா! பெட்டி நிறையப் பூஷணங்கள் தாருமம்மா! பட்டி நிறையப் பால் பசுவைத் தாருமம்மா! கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாருமம்மா! புகழுடம்பைத் தாருமம்மா! பக்கத்தில் நில்லுமம்மா! அல்லும்பகலும் எந்தன் அண்டையிலே நில்லுமம்மா! சேவித்து எழுந்திருந்தேன்; தேவி வடிவங்கண்டேன் வச்சிரக் கிரீடங்கண்டேன்; வைடூர்ய மேனி கண்டேன் முத்துக் கொண்டை கண்டேன்; முழுப்பச்சை மாலை கண்டேன் சவுரி முடி கண்டேன் தாழைமடல் சூடக் கண்டேன் பின்னழகு கண்டேன்; பிறைபோல நெற்றி கண்டேன் சாந்துடன் நெற்றி கண்டேன்; தாயார் வடிவம் கண்டேன் குறுக்கிடும் நெற்றி கண்டேன்; கோவைக்கனி வாயும் கண்டேன் கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன் மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன் கைவளையல் கலகல என கணையாழி மின்னக் கண்டேன் தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன் காலிற் சிலம்புகண்டேன்; காலணி பீலி கண்டேன் மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான் அன்னையே அருந்துணையே! அருகிருந்து காருமம்மா! வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா! தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன் மாதாவேயுன்றன் மலரடியில் நான் பணிந்தேன். இந்த அகவலைப் பாடி முடித்த பின்னர் தீபாராதனை செய்து வேண்டிய வரங்களைத் தந்தருளும்படி பிரார்த்திக்க வேண்டும்.

திருநீறு சொல்லும் தத்துவம் நெருப்பில் எந்தப் பொருளைப் போட்டாலும் அது இன்னொன்றாக மாறிவிடும். பஞ்சையோ, கட்டையையோ இட்டால் அது சாம்பலாகும். ஆனால், நெருப்பில் சாம்பலைப் போட்டால் என்னவாகும்? அது சாம்பலாகவே இருக்கும். எந்த மாற்றமும் அடையாது. இப்படி மாறாமல் இருக்கும் பிரம்ம தத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்கிறோம். மாற்றங்களைக் கடந்தவர் கடவுள். பிரம்மம் என்பது மாறுபாடுகள் இல்லாதது, அழியாதது, சாஸ்வதமானது என்று தத்துவ நூல்கள் சொல்கின்றன. கண்ணில் படுவதுதான் மனதில் நிலைத்து நிற்கும். கண்ணில் இருந்து மறைவது காலப்போக்கில் மறைந்து விடும். பிரம்மம் பற்றிய நினைப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நெற்றியில் திருநீறு அல்லது திருமண் பூசுகிறோம்.

விபூதி தரிக்கும் முறை: காலை மாலைகளில் குளித்தவுடனும், பூஜைக்கு முன்னும், ஆலய வழிபாட்டிற்கு முன்னும், உணவு உண்பதற்கு முன்னும், விபூதி அணிதல் வேண்டும். வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக நின்று, பூமியில் விபூதி சிந்தாமல், மூன்று விரல்களால் எடுத்து, அண்ணாந்து "சிவ சிவ'' எனக் கூறித் திருநீற்றுப்பதிகம் பாடி சிவனைத் தியானித்து நெற்றியில் அணிய வேண்டும்.